சுற்றுப்பயணிகள் போர்வையில் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சுற்றுலா விசா வழங்கி மோசடி வேலைகளை செய்து வந்ததாக நம்பப்படும் வங்காளதேசத்திற்கான மலேசியத் தூதரகத்தை சேர்ந்த ஓர் அமலாக்க அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் இந்த விசா வழங்கும் மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். எம் மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் மேல் விபரங்கள் எதனையும் தற்போதைக்கு வெளியிட இயலாது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். இந்த விசா மோசடியில் நாட்டில் உள்ள மேலும் சில அமலாக்கத் தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
இதுவரையில் பிடிபட்டுள்ள இரண்டு பேர், வங்காளதேசத்தில் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள குடிநுழைவுத்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள் என்று விஸ்மா புத்ரா அம்பலப்படுத்தியிருந்தது.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


