கோலாலம்பூர், நவ. 18-
வெளிநாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மூன்றாவது தரப்பினரிடம் தங்களின் கடப்பிதழ் அல்லது விசா அங்கீகாரத்தை எளிதாக தந்து விட வேண்டாம் என்று மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
இது போன்ற முக்கிய ஆவணங்களை பயன்படுத்தி, வெளிநாட்டவர்கள் வழங்கக்கூடிய எந்தவொரு வாய்ப்பையும் கண்டு மதிமயங்கி விட வேண்டாம் என்று முகமட் அலாமின் கேட்டுக்கொண்டார்.
மலேசியர்களை பயன்படுத்தி, மனித கடத்தல் அல்லது சுரண்டலுக்கு இது போன்ற மோசடி வேலைகள் வழிவகுக்கும் என்பதையும் அவர் விளக்கினார்.








