Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆபாச செயலில் ஈடுபட்டதாக இரு சீனப்பிரஜைகள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.14-

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி புதன்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 2இல் ஆபாச செயலில் ஈடுபட்டு, இடையூறு விளைவித்த குற்றத்தற்காக சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர், சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

27 வயது நபரும், அவரின் 28 வயது மனைவியும் நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

KLIA 2 இல் Q5 நுழைவாயிலில் பொது மக்கள் முன்னிலையில் சட்டையைக் கழற்றி ஆபாசமாக நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஏர் ஆசியா விமான நிலையத்தில் சீனாவிற்கு செல்ல வேண்டிய அந்த தம்பதியர், விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அத்தம்பதியர், ஆபாசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பு வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி அளிக்கப்படவிருக்கிறது. அதுவரையில் அவர்களை தலா 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அனுமதித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்