கோலாலம்பூர், நவ. 18-
வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரையில் ஜோகூரிரும், பகாங்கிலும் பெய்யக்கூடிய கனத்த மழை, மிக மோசமான அளவில் இருக்கலாம் என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா இன்று எச்சரித்துள்ளது.
பகாங்கில் குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் கனத்த மழை மிக கடுமையாக இருக்கும். ஜோகூரில் சிகமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியில் அடை மழை நீடிக்கும் என்று மெட் மலேசியா நினைவுறுத்தியுள்ளது.








