பினாங்கு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் பெளத்த, சீன ஆலயயங்கள் உடைக்கப்படும் என்று மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியதாக கூறப்படுவது தொடர்பில் அவரை புக்கிட் அமான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை தடயவியல், வியூக இயக்குநர் டத்தோ சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.|
எனினும் தாம் அவ்வாறு கூறியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார். இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டை தாம் கூறியதாக கூறும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி யை மேற்கோள்காட்டி, மலேசியா நொவ் என்ற செய்தி தளம் தீய நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதாக லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, பினாங்கு, ஜெலுத்தோங், தோகொங் பத்து வில் ஆற்றிய உரையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கெடாவில் ஓர் இந்து ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்தை மட்டுமே தாம் மேற்கோள்காட்டி பேசியதாக குவான் எங் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி


