Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி மாநி​லத்தில் பச்சைப் புத்தகத் திட்டத்திற்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

நெகிரி மாநி​லத்தில் பச்சைப் புத்தகத் திட்டத்திற்கு அனுமதி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள எல்லா தோட்டங்களிலும் பச்சை புத்தகத் திட்டத்தைக் கட்டாயமாக்க மாநில ஆட்சிக் குழு முடிவு செய்துள்ளதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு கண்டு வருவதால் அதை சமாளிக்கும் பொருட்டு தோட்டத் தொழிலாளர்கள் சுயமாக காய்கறிகளைப் பயிர் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் விஸ்மா நெகிரியில் மாநில ஆட்சிக் குழுவின் பிந்திய கூட்டத்தில் இத்தகவலை மாநில ஆட்சி குழு உறுப்பினர் சியூவ் செஹ் யொங் அறிவித்ததாக சாந்தகுமார் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தானா மேரா தோட்டத்தில் கட்டப்பட்ட மலிவு விலை வீடுகள், தானா மேரா அத்தோட்டத்தில் வேலை செய்யும் தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைப்பது குறித்தும் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்தாக ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்பதால் இத்திட்டத்தை விரைவுபடுத்தும்படி தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தாம் கேட்டுக் கொண்டதாக சாந்தகுமார் கூறினார்.

இக்கூட்டத்தில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட எல்லா அரசாங்க அமலாக்க அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்