பெத்தாலிங் ஜெயா,ஜன.18
21 டன் எடையுள்ள ஆறறை லட்சம் வெள்ளி மதிப்பிலான உயர்தரமான வர்ஜீனியா புகையிலை இலைகள் ஈப்போ, லோரோங் பெங்காலான் 7இல் கைப்பற்றப்பட்டது, கடந்த 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய பறிமுதல் ஆகும் எனத் தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் துணைச் செயலாளர் சைலானி ஹஷிம் தெரிவித்தார்.
மூன்று வார கால கண்காணிப்புக்குப் பிறகு இந்தப் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது.
அண்டை நாட்டில் இருந்து கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் கடத்தப்பட்ட அந்தப் புகையிலை உள்ளூர் விநியோகிப்புக்காக ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில், யாரும் கைது செய்யப்பட வில்லை எனவும் ஸ்டோர் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.








