Mar 19, 2026
Thisaigal NewsYouTube
செண்டாயானில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

செண்டாயானில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் கைது

Share:

சிரம்பான், நவம்பர்.22-

கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் சிரம்பான் நுசாரி பிஸ் செண்டாயானில் உள்ள ஒரு உணவகம் அருகே ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணையில் உதவுவதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 மற்றும் 29 வயதுடைய அந்த இரண்டு நபர்களை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார், மாஜிஸ்திரேட் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் ஆகியவற்றின் கீழ் இரு நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தியை ஆயுதமாகக் கொண்ட முகமூடி அணிந்த நபர்கள் 33 வயதுடைய அந்த இந்திய ஆடவரை வெட்டியதுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவருக்கு ஒரு கைத்துண்டாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக இதற்கு முன்பு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர், கொள்ளையடித்தல், வீடு புகுந்து திருடுதல், அடித்துக் காயம் விளைவித்தல் உட்பட 42 குற்றப்பதிவுகள் கொண்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்தது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்