துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் சிக்கியுள்ள பெர்காட் துவா கப்பலின் மீதமுள்ள பணியாளர்களை, நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளானது, விஸ்மா புத்ரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹம்ரியா துறைமுகத்தில் ஏழு மாதங்கள் சிக்கியிருந்த நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய மலேசிய பணியாளர் கமல் இதாமுதீன் கமல் ஆரிஃபின்-ஐச் சந்தித்த பிறகு, அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தொடர்ந்து முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், அங்கு சிக்கித் தவித்து வரும் மலேசியர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








