கோலாலம்பூர் ,ஜன.11
தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளை கொண்ட இல்ஹாம் டவர் கோபுரத்தை பறிமுதல் செய்தது உட்பட தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையை உடனடியாக நிறுத்துமாறு துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
எஸ்பிஆர்எம் மின் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும் என்று துன் டாயிம் தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டவிரோதப் பண குவிப்பு தொடர்பாக தங்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டி குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையும், விசாரணைகளும் சட்டத்திற்கு மீறிய செயல் என்று 86 வயதான துன் டாயிம் தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.








