தமது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஒரு பாதுகாவலரான ஆடவர் ஒருவர், குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நீதிபதிடத்தோ அகமது ஜம்சானி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 30 வயதுடைய அந்த நபர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இத்தகைய தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் மேற்கண்ட சட்டத்தின் கீழ் அந்த நபர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


