தமது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஒரு பாதுகாவலரான ஆடவர் ஒருவர், குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நீதிபதிடத்தோ அகமது ஜம்சானி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 30 வயதுடைய அந்த நபர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இத்தகைய தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் மேற்கண்ட சட்டத்தின் கீழ் அந்த நபர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


