தமது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஒரு பாதுகாவலரான ஆடவர் ஒருவர், குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நீதிபதிடத்தோ அகமது ஜம்சானி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 30 வயதுடைய அந்த நபர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இத்தகைய தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் மேற்கண்ட சட்டத்தின் கீழ் அந்த நபர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


