கோலாலம்பூர், மூன்று வயது சிறுமியைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது மாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் ஆகிய இருவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
28 வயதுடைய ஏ. சரண்யா மற்றும் அவரது தாயார் 64 வயதுடைய பி. சரோஜா ஆகியோர் மீது, கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஜாலான் புடு இம்பியான் பகுதியில் ஒரு சிறுமியின் தொடை மற்றும் பிறப்புறுப்பில் காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சரண்யா தனது ஆறாவது குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளதாலும், அவரது தாயார் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் பிணை வழங்கக் கோரி அவர்களது வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஜுலியானா அப்துல் ரஷித், இருவருக்கும் தலா 15,000 ரிங்கிட் பிணைத் தொகையை ஒரு நபர் உத்தரவாதத்துடன் அனுமதித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.








