சிப்பாங், மார்ச்.07-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - முனையம் இரண்டில், நபர் ஒருவர் பொது இடத்தில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசச் செய்கையில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெளியான அந்தச் சிறு வீடியோவில், சுகாதார தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் முகப்பிடம் அருகே நின்றிருந்த நபர், அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே இத்தகைய அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், அந்த நபர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
இந்தச் செயல் 'நெறிமுறையற்றது' என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது வரை அந்த நபரின் அடையாளம் குறித்துத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.








