ஹான்டாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.
எம்.வி. ஹோண்டியஸ் என்ற கப்பலில் அரிதான ஹாண்டா வைரஸ் பரவியதில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த கப்பலில் இருந்த பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வைரஸுக்கு தற்போது தடுப்பூசியோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்றாலும், உலகளவில் மிகப் பெரிய ஆபத்தாக மாறும் அறிகுறிகள் இல்லை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களில் 7 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஹான்டாவைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.








