May 12, 2026
Thisaigal NewsYouTube
ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

Share:

ஹான்டாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.

எம்.வி. ஹோண்டியஸ் என்ற கப்பலில் அரிதான ஹாண்டா வைரஸ் பரவியதில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த கப்பலில் இருந்த பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த வைரஸுக்கு தற்போது தடுப்பூசியோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்றாலும், உலகளவில் மிகப் பெரிய ஆபத்தாக மாறும் அறிகுறிகள் இல்லை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களில் 7 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஹான்டாவைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

 இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி