Mar 21, 2026
Thisaigal NewsYouTube
குழப்பங்களைத் தவிர்க்க, அரசாங்க அறிவிப்புகள் தெளிவாக வழங்கப்பட வேண்டும் – தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்து!
தற்போதைய செய்திகள்

குழப்பங்களைத் தவிர்க்க, அரசாங்க அறிவிப்புகள் தெளிவாக வழங்கப்பட வேண்டும் – தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்து!

Share:

கிள்ளான், செப்டம்பர்.14-

இவ்வாண்டு கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கூடுதல் விடுமுறை எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த நிலையில், அந்த நாளானது வேலை நாளா அல்லது விடுமுறை நாளா எனத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. பிரதமரின் அறிவிப்பு அவ்வாறு இருக்க, தோட்ட நிர்வாகங்கள் அதற்கு மாறாக அன்றைய நாளில் தோட்ட த்தொழிலாளர்கள் வேலைக்கு வர வேன்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவது அதிருப்தியை அளித்திருப்பதாக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் கருத்துரைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இது போன்ற அறிவிப்புகள் தெளிவாக மக்களுக்குக் கொண்டுப் போய் சேர்க்கப்பட வேண்டும். மேலும், அந்த விடுமுறை நாளில் வேலை செய்தால், ஊதியக் கணக்கீட்டையும் அறிவித்தால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். காரணம், தற்சமயம் தெளிவு குன்றிய இந்த அறிவிப்பால், தீபாவளி, அல்லது தைப்பூசம் போன்ற விழாக் காலங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் கூறி வருவதாக டத்தோ ஜி. சங்கரன் சுட்டிக் காட்டினார்.

கிள்ளான், புக்கிட் திங்கி தங்கும் விடுதியில் நடந்த தொழிற்சங்கங்களுக்கானப் பயிற்சியின் போது டத்தோ ஜி. சங்கரன் இவ்வாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து