மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், விலைவாசி உயர்வை சமாளிக்க உதவும் முயற்சியாகவும் சுத்தமான செம்பனை சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை நிலை நிறுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
பட்டியலில் அடைக்கப்பட்ட 1 கிலோ சமையல் எண்ணெய் 6 வெள்ளி 90 காசாகவும்
2 கிலோ சமையல் எண்ணெய் 13 வெள்ளி 30 காசாகவும்
3 கிலோ சமையல் எண்ணெய் 19 வெள்ளி 60 காசாகவும்
5 கிலோ சமையல் எண்ணெய் 30 வெள்ளி 90 காசாகவும் நிலை நிறுத்தப்பட்டது என உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்தது.
அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த விலைப் பட்டியல் நிலை நிறுத்தப்படும் என அவ்வமைச்சு கூறியது.
நியாயமற்ற விலைவாசி உயர்வுகளால் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மடானி அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் மூலம், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
அரசாங்கம் நிலை நிறுத்திய விலையைக் காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யும் தரப்பு மீது விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் கூறியது.








