பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மின்னியில் வர்த்தக முறையை தளமாக கொண்டு 40 மற்றும் 52 வயதுடைய இரு நபர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பூச்சோங் மற்றும் கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


