Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பட்டங்கள் விற்பனை, இரு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பட்டங்கள் விற்பனை, இரு நபர்கள் கைது

Share:

பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மின்னியில் வர்த்தக முறையை தளமாக கொண்டு 40 மற்றும் 52 வயதுடைய இரு நபர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பூச்சோங் மற்றும் கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News