வட ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ள போதிலும் அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.
சூடானில் உயர் கல்விப்பயின்று வரும் 29 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தூதரகம் அறிவித்துள்ளது. சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடும், கலவரமும் வெடித்துள்ளன. சூடானில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மாணவர்களின் நிலையை 24 மணி நேரம் கண்டறிவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் விஸ்மா புத்ரா 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


