வட ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ள போதிலும் அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.
சூடானில் உயர் கல்விப்பயின்று வரும் 29 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தூதரகம் அறிவித்துள்ளது. சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடும், கலவரமும் வெடித்துள்ளன. சூடானில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மாணவர்களின் நிலையை 24 மணி நேரம் கண்டறிவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் விஸ்மா புத்ரா 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


