வட ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ள போதிலும் அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.
சூடானில் உயர் கல்விப்பயின்று வரும் 29 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தூதரகம் அறிவித்துள்ளது. சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடும், கலவரமும் வெடித்துள்ளன. சூடானில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மாணவர்களின் நிலையை 24 மணி நேரம் கண்டறிவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் விஸ்மா புத்ரா 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


