நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணியின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை மாநில காபந்து அரசின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்கவிருக்கிறார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இரண்டாவது தவணையாக நியமிக்கப்படுவதற்கு அமிருடின் ஷாரியின் பெயரை பிகேஆர் முன்மொழிந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு, சுல்தானுடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.அதேவேளையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் தயாராக இருக்குமானால் சுல்தானின் அங்கீகாரத்திற்காக அப்பட்டியலை உடன் கொண்டு வரும்படி அமிருடின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது

மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

மாநில அளவிலான BN-PN கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தைப் பாதிக்காது: ஃபஹ்மி ஃபாட்சில் உறுதி

மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்


