நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணியின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை மாநில காபந்து அரசின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்கவிருக்கிறார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இரண்டாவது தவணையாக நியமிக்கப்படுவதற்கு அமிருடின் ஷாரியின் பெயரை பிகேஆர் முன்மொழிந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு, சுல்தானுடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.அதேவேளையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் தயாராக இருக்குமானால் சுல்தானின் அங்கீகாரத்திற்காக அப்பட்டியலை உடன் கொண்டு வரும்படி அமிருடின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


