கோலாலம்பூர், ஜனவரி.07-
மலேசியர்கள் வெனிசுலா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை ஒத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா இன்று அறிவுறுத்தியுள்ளது.
அந்த நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.
வெனிசுலா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி, தற்போதைக்கு அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.








