Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை

Share:

நாட்டில் தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும் நடமாட்டக்கட்டுப்பாடு நடவடிக்கையான பிகேபி – யை அரசாங்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கோவிட் -19, நோய்த் தொற்றின் தாக்கம் கடுமையானால் மட்டுமே பிகேபி ஐ அமல்படுத்த முடியும். தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்கள் அதிகரித்தாலும் நிலைமை மோசமடையவில்லை என்று கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய கோவிட் -19 காலகட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த டாக்டர் நோர் ஹிஷாம் இதனை குறிப்பிட்டார்.

Related News