May 18, 2026
Thisaigal NewsYouTube
நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து நியூசிலாந்து மாது காயம்
தற்போதைய செய்திகள்

நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து நியூசிலாந்து மாது காயம்

Share:

ரவாங், ஜூன்.28-

ரவாங், டெம்ப்ளர் பார்க், கஞ்சிங் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர், 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயத்திற்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் குறித்து இன்று சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றனர் என்று அதன் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நீர் வீழ்ச்சியின் பாறை மீது நின்று குளித்துக் கொண்டு இருந்த போது கால் இடறி அந்த வெளிநாட்டுப் பெண் கீழே விழுந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அந்த நியூசிலாந்துப் பெண்மணியை மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு எழுவர் கொண்ட வீரர்கள் குழு, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி