மூன்று டன் லோரி ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது லோரி ஓட்டுநரும் 21 வயது உதவியாளரும் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான எல்பிதி சாலையின் 48 ஆவது கிலோ மீட்டரில் பெந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து அதிகாலை 2.53 மணியளவில் தகவல் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சின்னாபின்னமான இசுசு ரக லோரியின் இடிப்பாடுகளிலிருந்து ஓட்டுநரையும், உதவியாளரையும் மீட்பதற்கு சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் பொது உறவு அதிகாரி சுல்ஃபாடி சகாரியா தெரிவித்தார்.
பின்னர் அவ்விருவரும் தீயணைப்புப்படையின் இஎம்ஆர்எஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


