மூன்று டன் லோரி ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது லோரி ஓட்டுநரும் 21 வயது உதவியாளரும் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான எல்பிதி சாலையின் 48 ஆவது கிலோ மீட்டரில் பெந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து அதிகாலை 2.53 மணியளவில் தகவல் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சின்னாபின்னமான இசுசு ரக லோரியின் இடிப்பாடுகளிலிருந்து ஓட்டுநரையும், உதவியாளரையும் மீட்பதற்கு சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் பொது உறவு அதிகாரி சுல்ஃபாடி சகாரியா தெரிவித்தார்.
பின்னர் அவ்விருவரும் தீயணைப்புப்படையின் இஎம்ஆர்எஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


