Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அமைதி மறியலில் வங்கி ஊழியர்கள்
தற்போதைய செய்திகள்

அமைதி மறியலில் வங்கி ஊழியர்கள்

Share:

புத்ராஜெயா, ஜூலை 22-

நாடு தழுவிய நிலையில் 5 வங்கிகளின் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று மதிய உணவு நேரத்தில் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE- பின் உறுப்பினர்களான 250 க்கும் மேற்பட்டவர்கள், வங்கிகள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட விவகாரகளை மேற்கோள்காட்டி இந்த மறியலில் இறங்கினர்.

தொழிற்சங்கத்தை முறியடிக்கும் முயற்சிகள், வங்கி தலைமை செயல்முறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அபரிமிதமான சம்பளம், பயிற்சிக்கான அணுகல், நியாயமற்ற ஊதிய முறை மற்றும் வேலையிட பாதுகாப்பு ஆகியவற்றை முன்நிறுத்தி அவர்கள் மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வங்கியின் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப நியாயமான சம்பளம் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு