Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால் காலமானார்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால் காலமானார்

Share:

கோலாலம்பூர், மே 10-

நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால், கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் இன்று காலை 11.46 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69.

டத்தோ முத்தாங் தகாலுக்கு டத்தின் ஹோ மே லெங் என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மலேசிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று அஜர்பைஜான் நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட முத்தாங் தகால், உடல் நலம், சுகவீனப்பட்டதைத் தொடர்ந்து தமது வருகையை பாதியிலேயே முடித்துக்கெண்டு நாடு திரும்பினார்.

மே 6 ஆம் தேதி IJN- னில் சேர்க்கப்பட்ட அவர், சுயநினைவு இழந்த நிலையில் கவலைக்கிடமாக இருந்து வந்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சரவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் மேலவைத் தலைவர் டாக்டர் வான் ஜுனாடி துவாங்கு ஜாபர்-க்கு பதிலாக புதிய மேலவைத் தலைவராக முத்தாங் தகால் நியமிக்கப்பட்டார்.

மலேசிய வரலாற்றில் டாயாக் பூர்வக்குடி இனம் மற்றும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த முதலாவது மேலவைத் தலைவர் என்ற பெருமையை சரவா, GPS கட்சியைச் சேர்ந்த முத்தாங் தகால் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து