கஞ்சா கலக்கப்பட்ட பிஸ்கட் ரொட்டியை தனது 10 வயது மகள் உண்ணும் அளவிற்கு கவனக்குறைவாக இருந்ததாக ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முகமட் ஃபிர்டாவூஸ் ஹசீம் என்ற 39 வயதுடைய அந்த தொழிலாளி, கடந்த மே 29ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பேரா, கெரிக், கம்போங் பாகான் லாவின் என்ற கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபர், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது கூடிய பட்சம் 20ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


