Mar 16, 2026
Thisaigal NewsYouTube
இல்லத்தரசி வெ.1.5 மில்லியன் இழப்பு
தற்போதைய செய்திகள்

இல்லத்தரசி வெ.1.5 மில்லியன் இழப்பு

Share:

சிரம்பான்,ஜன.22
சிரம்பானில் இல்லத்தரசி ஒருவர் ஆன்லைன் மோசடியில் 1.5 மில்லியன் வெள்ளியை இழந்தார்.

இச்சம்பவம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை தம் தரப்புக்கு ஓர் அறிக்கை வந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஹட்டா சி டின் தெரிவித்தார்.

அறிமுகமில்லாத சந்தேகிக்கும் அந்நபர் தம்மை போலீஸ் அதிகாரியாக பாதிக்கப்பட்டவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டதுடன் அவர் மோசடி குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருந்ததாக ஓர் அறிக்கையில் நேற்று தெரியவந்துள்ளது.

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை வங்கியில் செலுத்துமாறு அந்நபர் பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவிட்டதாக முஹமாட் ஹட்டா கூறினார்.

பின் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து போலீஸில் புகார் அளித்ததாக அவர் விளக்கினார்.

Related News