டிஏபி, புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருசின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
பேரா, மன்ஜுங் அருகில் ஆயிர் தாவாரில் உள்ள ஙெ கூ ஹாம் - மின் வீட்டில் நேற்று அதிகாலை 2.50 மணியளவில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் வீட்டின் முன்வாசலில் சிதறிக்கிடக்கும் பொருட்களின் ஆதாரங்கள் மற்றும் பொது மக்களின் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உளவுத்துறை பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
ஙெ கூ ஹாம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அறிக்கைக்கும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே, ஙெ கூ ஹாம் கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அதனை நோக்கி அடுத்த கட்ட நகர்வு முன்னெடுக்கப்படும் என்று தான் ஶ்ரீ ரசாருடின் குறிப்பிட்டார்.








