ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வந்த 28 வயதான மலேசிய பெண் டான் கா மிங், கடந்த மாத இறுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் செயிண்ட் ஜேம்ஸ், தாரீ ஸ்டிரிட் பகுதியில் உள்ள வீட்டில் அவர் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்.
உடனடியாக ரோயல் பெர்த் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
38 வயதான யூனிஸ் கம்பாரி என்பவர் டான் மீது தாக்குதல் நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக அந்நாட்டு கொலை விசாரணைப் பிரிவு போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருவருக்கும் இடையிலான குடும்ப உறவின் பின்னணியில் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.








