மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியாவின் கணிப்பின்படி, அடுத்த ஆண்டு உருவாகும் சூப்பர் எல் நினோ நிகழ்வு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான எகுய்னொக்ஸ் காலத்தில் கடும் வெப்பம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நீண்ட வறட்சி, மூடுபனி மற்றும் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாநிலங்களில் நீண்ட வறட்சிக்கான சாத்தியம் உள்ளதால், பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறும், வெளியூர் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து அதிகாரப்பூர்வ வானிலை தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் மெட்மலேசியா அறிவுறுத்தியுள்ளது.








