சிலாங்கூர் மாநிலம் பந்திங் அருகே தெலுக் புனுட் பகுதியில் வீட்டின் வெளியே 52 வயது விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள், அந்த நபர் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், அவர் தனது மகன் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணமோ, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளோ அல்லது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமோ இதுவரை கைப்பற்றப்படவில்லை.
எனினும், சந்தேகிக்கப்படும் சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பாக பந்திங் பகுதியில் நேற்று இரவு, 20 வயதுகளில் உள்ள உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








