பெசுட், நவ. 26-
ஆடவர் ஒருவர் தனது காரில் இறந்து கிடந்தது இன்று பிற்பகலில் கண்டு பிடிக்கப்பட்டது. திரெங்கானு, பெசுட், கம்போங் தெம்பிலாவில் மெர்சடிஸ் ரக காரில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பிற்பகல் 2.15 மணியளவில் தீயணைப்பு,மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக பெசுட் நிலையத் தலைவர் முகமட் அஸ்ருல் இஷாம் தெரிவித்தார்.
பூட்டப்பட்டிருந்த காரின் தகவுகள் திறக்கப்பட்டு, அந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








