ஜோகூர்,ஆ௧ஸ்ட் 04-
ALBERTINE LEO JIA HUI என்ற 6 வயது சிறுமியைக் கடத்தியது தொடர்பாக, முன்னதாக கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலிஸ் மீண்டும் கைது செய்துள்ளது.
JOHOR KULAI-யில் உள்ள அந்த ஆடவரின் குடியிருப்பில் பல்வேறு பாலியல் பொம்மைகள், ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் விளையாட்டு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் போலிஸ் தலைவர் KOMISIONER M KUMAR கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னதாகப் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதான அந்த 31 வயதான ஆடவர், தடுப்புக்காவல் உத்தரவுக்காக நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும்; அது குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் KOMISIONER M KUMAR வலியுறுத்தியுள்ளார்.








