Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக சிகாமட், பத்து பஹாட் பதிவேட்டில் இடம் பெற வேண்டும்
தற்போதைய செய்திகள்

இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக சிகாமட், பத்து பஹாட் பதிவேட்டில் இடம் பெற வேண்டும்

Share:

சிகாமட், செப்டம்பர்.08-

பத்து நாட்களில் தொடர்ந்து நில அதிர்வுக்குரிய பகுதியாக மாறியுள்ள ஜோகூர், சிகமாட்டையும், பத்து பஹாட்டையும் இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக வரைப்படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று பொதுப்பணி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் கட்டிடங்களின் பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிச் செய்வதற்காக சிகமாட்டையும், பத்து பஹாட்டையும் தேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் வலியுறுத்தினார்.

இவ்விரு மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்கள், கனிம மற்றும் புவியியல் துறை மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா ஆகியவை ஆபத்தின் தன்மையை விவரித்து இருப்பதானது, அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

நில அதிர்வு அபாய வரைபடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பகுதிக்கும், நில நடுக்கங்களைத் தாங்கும் பெரிய கான்கிரீட் கட்டமைப்புகள் போன்ற வலுவான கட்டுமானங்கள் விவரக் குறிப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால், சிகாமட்டில் அந்த விவரக் குறிப்பு இன்னும் வரைபடத்தில் சேர்க்கப்படவில்லை. இதற்கான தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் தொடர்பாக சிகாமட் பொதுப்பணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் அஹ்மாட் மஸ்லான் இதனைத் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து