தெலுக் இந்தான்,ஜுலை19-
தனது காதலியான 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கனரக இயந்திர ஓட்டுநர் ஒருவர் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் T. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 19 வயது ஓட்டுநர், கடந்த 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி தெலுக் இந்தானில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்நபர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கர்ப்பிணியான அந்த வயது குறைந்த பெண்ணுக்கு தொல்லைக் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தையுடன் அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.








