கணவன் மனைவி பயணித்த மோட்டார் சைக்கிள், இராணுவ லோரியின் பின்புறம் மோதியதில் அவ்விருவரும் உயிர் இழந்தனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 87.0 கிலோ மீட்டரில் சுங்கை பட்டாணிக்கு அருகில் நிகழ்ந்தது.
இராணுவ லோரியில், மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் ஓர் இராணுவ வீரரான 41 வயது ரிட்சுவான் சாலெஹ் ரம்லியும் அவரின் 39 வயது மனைவி ரொஸ்மாவாத்தி இஸ்மாயில் என்பவரும் உயிரிழந்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


