Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன

Share:

எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் மாதிரி 390 ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள், குவிந்த கிடந்த கசடுகள் மற்றும் இதர இரும்புப்பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை, விபத்து நடந்த நாள் முதல், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த போ​லீசாரின் மஞ்சள் நிற பாதுகாப்பு நாடா அகற்றப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ​மீட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று மாலை வரையில் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்த போதிலும் சிதறிக்கிடந்த இடிபாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய கனரக வாகனங்கள் இரவு 7 மணியுடன் சேவையை நிறு​த்திக்கொண்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் தெரி​வித்துள்ளார். விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை இன்னும் 30 நாட்ளுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு