Aug 6, 2026
Thisaigal NewsYouTube
எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன

Share:

எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் மாதிரி 390 ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள், குவிந்த கிடந்த கசடுகள் மற்றும் இதர இரும்புப்பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை, விபத்து நடந்த நாள் முதல், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த போ​லீசாரின் மஞ்சள் நிற பாதுகாப்பு நாடா அகற்றப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ​மீட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று மாலை வரையில் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்த போதிலும் சிதறிக்கிடந்த இடிபாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய கனரக வாகனங்கள் இரவு 7 மணியுடன் சேவையை நிறு​த்திக்கொண்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் தெரி​வித்துள்ளார். விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை இன்னும் 30 நாட்ளுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது