எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் மாதிரி 390 ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள், குவிந்த கிடந்த கசடுகள் மற்றும் இதர இரும்புப்பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை, விபத்து நடந்த நாள் முதல், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீசாரின் மஞ்சள் நிற பாதுகாப்பு நாடா அகற்றப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு மீட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று மாலை வரையில் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்த போதிலும் சிதறிக்கிடந்த இடிபாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய கனரக வாகனங்கள் இரவு 7 மணியுடன் சேவையை நிறுத்திக்கொண்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை இன்னும் 30 நாட்ளுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


