Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் செராய், செலுவாங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் நிலைநிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாடாங் செராய், செலுவாங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

Share:

கெடா, மே 15 -

கெடா, பாடாங் செராய், சுங்கை செலுவாங் தோட்டத்தில் சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1953 ஆம் ஆண்டு முதல் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், அதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஆலயத் தலைவர் கிஷோர் குமார் கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகத்தின் கேட்டுக்கொண்டனர்.

சைம் டார்பிக்கு சொந்தமான நிலப்பகுதிகள், KTPC எனப்படும் Kulim Technology Park Coperation நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டதாக கூறி, தொழில் பேட்டைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட நிறுவன த்திடமிருந்த இரண்டு முறை நோட்டீஸ் பெற்று விட்டதாகவும் ஆலயத் தலைவர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

ஆலயம் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் உடைப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ள வேளையில் அந்த பழமை வாய்ந்த ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆலயத்தின் அருகாமையிலேயே மாற்று நிலம் வழங்கப்படுமானால் ஆலயத்தை இடம் மாற்றம் செய்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கிஷோர் குமார் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முன்னதாக, இவ்வாலயப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோரின் கவனத்திற்கு அவரின் சிறப்பு அதிகாரி குமரேசன் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கிஷோர் குமார் குறிப்பிட்டார்.

அத்துடன் கெடா மாநில இந்தியர்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் சியா ஜென், ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரித்து ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து