May 16, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிசி மகன் மீதான தாக்குதல்: சிசிடிவியில் முகம் சரியாகப் பதிவாகவில்லை - காவல்துறை தகவல்
தற்போதைய செய்திகள்

ரஃபிசி மகன் மீதான தாக்குதல்: சிசிடிவியில் முகம் சரியாகப் பதிவாகவில்லை - காவல்துறை தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் மீதான தாக்குதல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காணொளிகளில், குற்றவாளிகளின் முகம் சரியாகப் பதிவாகவில்லை என்பதால் இவ்வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், கருப்பு உடையணிந்த இரு ஆடவர்கள், ரஃபிஸி மகன் மீது மருத்துவ ஊசியால் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், அந்த ஊசியின் வழியாக உடம்பில் செலுத்தப்பட்டவை குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவிற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து