Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் - போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்: கல்வி அமைச்சர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் - போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்: கல்வி அமைச்சர் கூறுகிறார்

Share:

சிப்பாங், ஜூலை.30-

சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், நேற்று ஆசிரியரை முகத்திலேயே குத்தி, தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கல்வி அமைச்சு, போலீசாரிடமே விட்டு விடுவதாக அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சைப் பொறுத்தவரை, நடப்பில் உள்ள விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்விவகாரத்தைக் கையாளும். அதே வேளையில், இந்தச் சம்பவத்தைப் போலீஸ் துறை கையாளுமானால், மேல் விசாரணைக்கு ஏதுவாக இந்த விவகாரம் முழுமையாகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

உடற்பயிற்சி பாடத்திற்கு மட்டம் போட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவனை, ஆசிரியர் கண்டித்ததில் அதிருப்தி கொண்ட அந்த மாணவன், ஆசிரியரை முகத்திலேயே குத்தித் தாக்குதல் நடத்திய சம்பவம் காஜாங் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவம் தொர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவனைக் கைது செய்த போலீசார் விசாரணைக்கு ஏதுவாக இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.

பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தங்கள் கைப்பேசியில் பதிவுச் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் வினவிய போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் எனும் நல்லுரை வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது