கோலாலம்பூர், ஏப்ரல்.26-
உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, மலேசியாவை ஒரு பாதுகாப்பான, நெகிழ்வுத்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார். மலேசியா ஏற்கனவே பல்வேறு உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு தனது பொருளாதார நிலைத்தன்மையை நிரூபித்துள்ளதாகவும், தற்போதைய கொள்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு என்பது உலகளாவிய முதலீட்டாளர்களின் முக்கியக் கவலையாக இருக்கும் வேளையில், மலேசியா அந்தத் துறையில் கொண்டுள்ள நிலைத் தன்மை உலகளாவிய நிலையில் ஒரு நம்பகமான நாடாகத் திகழ வழிவகுக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








