Apr 21, 2026
Thisaigal NewsYouTube
போலி என நினைத்து அசல் ரோலக்ஸ் கடிகாரத்தை விற்க முயற்சி: சிங்கப்பூர் நபருக்குச் சிறை
தற்போதைய செய்திகள்

போலி என நினைத்து அசல் ரோலக்ஸ் கடிகாரத்தை விற்க முயற்சி: சிங்கப்பூர் நபருக்குச் சிறை

Share:

தனது ரோலக்ஸ் கைக்கடிகாரம் போலி என்று தவறாக நினைத்து, அதனை ஒரு சில்லறை விற்பனையாளரிடம் ஏமாற்றி விற்க முயன்ற 50 வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த நபர், தன்னிடம் இருந்த அரிய வகை ரோலக்ஸ் தய்டோனா கைக்கடிகாரம் போலியானது என நம்பியுள்ளார். இதனால், ஒரு கைக்கடிகார விற்பனையாளரை ஏமாற்றி அதிக லாபம் ஈட்டும் நோக்கில், அதனை அசல் கடிகாரம் என்று கூறி விற்க முயன்றுள்ளார். ஆனால், உண்மையில் அந்த கைக்கடிகாரம் 89,800 சிங்கை டாலர் அதாவது சுமார் 3 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள அசல் கடிகாரம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்தப் பொருள் அசலாகவே இருந்தாலும், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற குற்ற நோக்கம் இருந்த காரணத்தினால், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு இந்த இரண்டு வாரச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. போலி என்று நினைத்து அசல் கடிகாரத்தையே ஏமாற்றி விற்கத் துணிந்த இந்த விசித்திரமான சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Related News