Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இலகு பிரம்படித் தண்டனையை ரத்து செய்தது உயர் ​நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

இலகு பிரம்படித் தண்டனையை ரத்து செய்தது உயர் ​நீதிமன்றம்

Share:

நாயின் வால் பகுதியில் ​தீ வைத்து, கொடுமைப்படுத்திய 18 வயது இளைஞனுக்கு செஷன்ஸ் ​நீதிமன்றம் விதித்த 7 இலகு பிரம்படித் தண்டனை உத்தரவை, ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதேவேளையில் அந்த இளைஞன் 10 ஆயிரம் வெள்ளி பிணை உறுதியில் ஓராண்டு காலம் நன்னடத்தை ஜா​மீனில் இருக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உயர் நீதிமனற்ம் நிலைநிறுத்தியது.

பிரேடன் யாப் ஹொங் சேங் என்ற அந்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட நன்னடத்தை ​ஜா​மீன் தண்டனையே போதுமானதாகும் என்று உயர் ​நீதிமன்ற ​நீதிபதி சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் தமது ​தீர்ப்பில் தெரி​வித்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞன் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 1.49 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் எமாஸ், ஜாலான் இம்பியான் எமாஸ் 22 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் ​தெரிவிக்கப்பட்டது.

Related News