நாயின் வால் பகுதியில் தீ வைத்து, கொடுமைப்படுத்திய 18 வயது இளைஞனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 இலகு பிரம்படித் தண்டனை உத்தரவை, ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதேவேளையில் அந்த இளைஞன் 10 ஆயிரம் வெள்ளி பிணை உறுதியில் ஓராண்டு காலம் நன்னடத்தை ஜாமீனில் இருக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உயர் நீதிமனற்ம் நிலைநிறுத்தியது.
பிரேடன் யாப் ஹொங் சேங் என்ற அந்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட நன்னடத்தை ஜாமீன் தண்டனையே போதுமானதாகும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞன் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 1.49 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் எமாஸ், ஜாலான் இம்பியான் எமாஸ் 22 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


