நாயின் வால் பகுதியில் தீ வைத்து, கொடுமைப்படுத்திய 18 வயது இளைஞனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 இலகு பிரம்படித் தண்டனை உத்தரவை, ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதேவேளையில் அந்த இளைஞன் 10 ஆயிரம் வெள்ளி பிணை உறுதியில் ஓராண்டு காலம் நன்னடத்தை ஜாமீனில் இருக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உயர் நீதிமனற்ம் நிலைநிறுத்தியது.
பிரேடன் யாப் ஹொங் சேங் என்ற அந்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட நன்னடத்தை ஜாமீன் தண்டனையே போதுமானதாகும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞன் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 1.49 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் எமாஸ், ஜாலான் இம்பியான் எமாஸ் 22 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


