கோலாலம்பூர், ஜூலை 04-
பல்வேறு SCAM மோசடி தொடர்பில் இவ்வாண்டு மே மாதம் வரையில் 20 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தேசிய SCAM ஆய்வு மையம் மேற்கொண்டு ஆய்வு நடவடிக்கையில் மிகப்பெரியத் தொகை SCAM மோசடிகளால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய SCAM ஆய்வு மையம் நிறுவப்பட்டது முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு மே மாதம் வரையில் மேற்கொண்ட ஆய்வில் SCAM மோசடிகளால் நிகழ்ந்த பண இழப்புகள் துல்லியமாக கண்டறியப்படடுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இணையம் வழி நடைபெறும் இத்தகைய நூதன மோடிசகள் தொடர்பில் மொத்தம் 10 ஆயிரத்து 649 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை புகார் பெற்றுள்ளது. பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பண இழப்பு தொடர்பில் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.








