May 27, 2026
Thisaigal NewsYouTube
கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் மரணம்

Share:

குவந்தான், ஜன.4-


கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் கிழக்குரையோர நெடுஞ்சாலையில் 152.4 ஆவது கிலோ மீட்டரில் குவந்தான், பெல்டா நேரெக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாரான் மற்றும் தெமர்லோ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 வீரர்கள், காயமுற்றவர்களை காப்பாற்றியதுடன், உயிரிழந்த இரு நபர்களின் உடல்களையும் மீட்டனர் என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News