நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, லெபு மெதினி உத்தாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 32 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்துள்ளார்,
மேலும், அப்பகுதியானது சட்டவிரோத கார் பந்தயம் மற்றும் ஆபத்தான ஓட்டம் போன்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அதிகம் செயல்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது மொத்தம் 45 கார்கள் சோதனை செய்யப்பட்டதுடன், 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 63 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் அதில் ஈடுபட்டிருந்தனர்.
கார்கள் சட்டவிரோதமாக மாற்றம் செய்தல், குறிப்பாக புகை வெளியேறும் குழாய் மாற்றங்கள், விதிமுறைகளுக்கு உட்படாத வாகன பதிவு எண்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள், சாலை போக்குவரத்து துறையின் விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக எம். குமரேசன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை மூலம் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.








