லாருட்ஜூலை 3-
லாருட், செலமா -வில் போலீஸ்காரர் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டப் பின்னர் காலை 7.40 மணியளவில் வீடு திரும்பிய அந்த போலீஸ்காரரின் மனைவி, கணவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த போலீஸ்காரரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், அவர் இறந்த விட்டதை உறுதி செய்தனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ்கார் செலமா- போலீஸ் நிலையத்தில் கோபெரல்- லாக பணி புரிந்து வந்தார் என்று செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








