கோலாலம்பூரிலிருந்து கேரள மாநிலம் கொச்சினை நோக்கிச் சென்ற Batik Air விமானம் ஒன்றில், அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமை இரவு Kuala Lumpur-லிருந்து Kochi வழித்தடத்தில் இயக்கப்பட்ட Batik Air விமானம் OD231-இல் பயணம் செய்த அவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இச்செயலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளையில், அவர் விமானத்தின் ஜன்னல் பகுதியை சேதப்படுத்தியதுடன், சக பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் மிரட்டியதாகவும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானப் பணியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட அந்நபர், விமானம் கொச்சியில் தரையிறங்கியதும், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.








