சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று மக்களவை முன்னாள் சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் ஆரிஃப் முகமாஸ் யூசோப் அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற சட்டங்களை ஆராய்வதிலும், அவற்றில் திருத்தங்களை செய்வதிலும் அரசாங்கம் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் இவற்றின் மீதான நடப்பு அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று முகமட் ஆரிஃப் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளையில் நாட்டில் மேலோங்கியுள்ள இனவாதம், மதவாதப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று முன்னாள் மேல்மறையீட்டு நீதிபதியாக முகமட் ஆரிஃப் வலியுறுத்தினார். கோலாலம்பூரில் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சீர்திருத்தத்தின் வாயிலாக நாட்டின் மறுகட்டுமானம் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் சட்ட நிபுணருமான முகமட் ஆரிஃப் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


