சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று மக்களவை முன்னாள் சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் ஆரிஃப் முகமாஸ் யூசோப் அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற சட்டங்களை ஆராய்வதிலும், அவற்றில் திருத்தங்களை செய்வதிலும் அரசாங்கம் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் இவற்றின் மீதான நடப்பு அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று முகமட் ஆரிஃப் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளையில் நாட்டில் மேலோங்கியுள்ள இனவாதம், மதவாதப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று முன்னாள் மேல்மறையீட்டு நீதிபதியாக முகமட் ஆரிஃப் வலியுறுத்தினார். கோலாலம்பூரில் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சீர்திருத்தத்தின் வாயிலாக நாட்டின் மறுகட்டுமானம் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் சட்ட நிபுணருமான முகமட் ஆரிஃப் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


