Jul 18, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர்கள் மன்ற மேல்முறையீடு: நஜிப் ரசாக் நேரில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர்கள் மன்ற மேல்முறையீடு: நஜிப் ரசாக் நேரில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், வரும் ஜூலை 31 அன்று நடைபெறும் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் மேல்முறையீட்டு விசாரணையில் நேரில் கலந்துகொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தைக் குறைத்த மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர்கள் மன்றம் இந்த மேல்முறையீட்டைத் தொடுத்துள்ளது. நஜிப்பின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறைக்கு உத்தரவிடும் சட்டப்பூர்வ கட்டளையை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று பிறப்பித்தது.

மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் மன்றம் தொடர்ந்த நீதித்துறை மறுஆய்வு மனுவை கடந்த 2024 நவம்பரில் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது இந்த மேல்முறையீடு நடைபெறவுள்ளது.

Related News